மாநில அரசின் அரசாணைகள், அரசு கடிதங்கள், அரசிதழ்கள் மற்றும் இதர தகவல்கள் ஆகியவற்றை பெறலாம். (Morality of the Third Umpire's Decisions)*
Wednesday, August 22, 2018
G.O.Ms.No.245 dt.19.07.2018 Finance (PGC-1) Department. 1.10.1979 முதல் 30.6.1996 முடிய அரசு பணியிலிருந்துஓய்வு பெற்றவர்கள் 33 வருடம் பணி முடித்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1.7.1996 முதல் 30 வருடம் பணி முடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 1.7.1996 க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு 30 வருடம் பணி முடித்தால் முழு ஓய்வூதியம் வழங்குவது போல் 30.6.1996க்கு முன்னர் 30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் அவ்வாறே வழங்கவேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் 1.7.1996க்கு முன்னர் 30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரசாணை எண். 245 வழங்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment